கார்ட்டூனிஸ்ட் ஜே.பி மறைவு




 


ஜே.பி கார்ட்டூன் பார்த்து ரசிக்காதவர்கள் பத்திரிகை வாசகர்களாக இருக்க முடியாது..


அதேபோல் மித்திரனில் பூரம் பதில்கள் என்று வாசக நெஞ்சங்களை கவர்ந்தவர்.. 


அன்புக்குரிய ஜெயபாலன் அண்ணன் காலமானார் என்ற செய்தி துயரத்தை தருகிறது.. 


வீரகேசரி நிறுவன ஓய்வுக்குப் பின்னர் சுடர் ஒளியிலும் அவர் சில காலம் பணியாற்றியிருந்தார்.


எப்போதும் நகைச்சுவையாக பேசுவார்.. அதனால் அலுவலகத்தில் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகம்.. யாரையும் அவர் கடிந்து பேசியதை கண்டதில்லை.. ஆழ்ந்த அரசியல் அறிவு , பொது அறிவு கொண்டவர் அவர்.. பல விருதுகளையும் பெற்றவர்..


..