. சி.எஸ்.கே. அணியில் யாழ். மாணவன்




 


சி.எஸ்.கே அணியின் பயிற்சி முகாமில் 17 வயதேயான யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மாணவன் குகதாஸ் மதுலன் இணைந்திருருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியின் போட்டியின் போது மலிங்கவின் பந்துவீச்


சு பாணியில் சிறப்பாக பந்துவீசி தரமான யோர்க்கர் ஒன்றை வீசினார் குகதாஸ் மதுலன். இந்த வீடியோ ட்ரண்டாகிய நிலையில், சி.எஸ்.கே அணி நிர்வாகம் உடனடியாக அவரை அணுகி, சென்னைக்கு அழைத்துள்ளது.

 

 சென்னையில் டோனி தங்கியிருக்கும் அறைக்கு அருகிலேயே குகதாஸ் மதுலனுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இவரின் பந்துவீச்சு பாணியை டோனி பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், சி.எஸ்.கே அணியின் நெட் பவுலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக அடுத்த சீசனில் மலிங்க ஸ்டைலில் இரட்டை தாக்குதலை சி.எஸ்.கே அணி செய்யும் என்று பார்க்கப்படுகிறது.