பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ. டி. எம் ராபி மற்றும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் இன்று (17) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.
கல்முனையின் நடப்பு சமூக பிரச்சனைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாநகர சபையினால் பள்ளிவாசல் பரிபாலனத்துக்காக வழங்கப்படும் சேவைகள் தொடர்பாகவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன.
இக்கலந்துரையாடல் ஊடாக சமூக நலனுக்காக இணைந்து பணியாற்றும் வகையிலும், எதிர்கால திட்டங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியையும் பிரதிபலிக்கும் வகையில் விஷேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)

Post a Comment
Post a Comment