களுவங்கேணியில் இனியபாரதியின் சகா,கைது



 


இனிய பாரதியின் சகாவான மட்டு. களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை இன்று திங்கட்கிழமை (25) மட்டு. களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கட ந்த ஜுலை 6ஆம் திகதி அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய கருணா அணியைச் சேர்ந்த இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் அவரது சகாவான சசீதரன் தவசீலன் ஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.


இதனையடுத்து இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இனியபாரதியுடன் சேர்ந்து இயங்கிவந்த வரும் அவரின் சகாவான களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை இவரது வீட்டில் வைத்து இன்று திங்கட்கிழமை பகல் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.