களுவன்கேணி கிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம்!






 ( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனையின்  ஒழுங்கமைப்பில்   "ஆதித்தி"  கைத்தறி நிறுவனத்தின்    அனுசரணையில்   பொதுப்போக்குவரத்து வசதி குறைந்த களுவன்கேணி  கிராமத்தில்   மாபெரும்  மருத்துவ முகாம்   நேற்று முன்தினம் (16) முன்னெடுக்கப்பட்டது .

 களுவன்கேணி விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் போது   விழிப்புணர்வு கருத்தரங்கு,  நடமாடும் பல் சிகிச்சைப் பிரிவு , மூக்கு கண்ணாடி வழங்கல்,போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை  பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரனின் ஏற்பாட்டில்  100 மூக்குக் கண்ணாடிகளை மட்டக்களப்பு LIONS கழகம் ஊடாக பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.

நோய் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு  உதவுவதாகவும் தெரிவித்திருந்தார் .


இவ் மருத்துவ முகாமில் சிகிச்சை பெறுவதற்காக மாணவர்கள் உட்பட  சுமார் 250மேற்பட்டவர்கள் வருகை தந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.