( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கமைப்பில் "ஆதித்தி" கைத்தறி நிறுவனத்தின் அனுசரணையில் பொதுப்போக்குவரத்து வசதி குறைந்த களுவன்கேணி கிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம் நேற்று முன்தினம் (16) முன்னெடுக்கப்பட்டது .
களுவன்கேணி விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் போது விழிப்புணர்வு கருத்தரங்கு, நடமாடும் பல் சிகிச்சைப் பிரிவு , மூக்கு கண்ணாடி வழங்கல்,போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் 100 மூக்குக் கண்ணாடிகளை மட்டக்களப்பு LIONS கழகம் ஊடாக பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.
நோய் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு உதவுவதாகவும் தெரிவித்திருந்தார் .
இவ் மருத்துவ முகாமில் சிகிச்சை பெறுவதற்காக மாணவர்கள் உட்பட சுமார் 250மேற்பட்டவர்கள் வருகை தந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment