RDA வீரமுனை பெயர்ப் பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை!




(வி.ரி.சகாதேவராஜா)

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீரமுனைக்கான பெயர்ப்பலகையை அகற்ற சம்மாந்துறை பிரதேச சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் (25) திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சீற்றத்துடன் தெரிவித்தார்.

கல்முனை ஊடக மையத்தில் இன்று (25)  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த காலத்தில் வீரமுனை ஆண்டிர சந்தியில் ஆலய வளைகோபுரம் அமைப்பதற்கு முயற்சித்த வேளையில் இதே தரப்பினர் இடையூறு விளைவித்த ரன். அன்றைய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.


வீரமுனையில் ஒரு உறுப்பினருமுள்ளார். இதுவரை அவர் வாய்திறக்க வில்லை. அவரை அந்த மக்கள் எதற்காக தெரிவு செய்தார்கள்? 

அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தால் வேற இடம் என்றால் மறுகணம் கூட்டுக்குள் அடைத்து விடுவார்கள் .

ஆனால் இங்கே வீதி அபிவிருத்தி  அதிகாரிகள் வாய் மூடி மௌனியாக திரும்பி வந்திருக்கிறார்கள். ஏன் ?
அவர்கள் இதுவரை போலீசில் முறைப்பாடு  செய்தார்களா ? சட்ட நடவடிக்கை எடுத்தார்களா?

இலங்கையின் முறைப்படி அதிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
 
RDA. இற்கு சொந்தமான வீதியில் பிரதேச சபையின் அதிகாரம்

1. RDA (Road Development Authority) சொந்தமான சாலைகள்

தேசிய வீதிகள் (A-கிளாஸ், B-கிளாஸ் சாலைகள்) அனைத்தும் RDA-வின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அந்தச் சாலைகளில் பலகை, விளம்பரம், பெயர்பலகை போன்றவற்றை வைக்க RDA அனுமதி தேவை.

சட்டப்படி Local Authority (Pradeshiya Sabha, Urban Council, Municipal Council) க்கு RDA சாலைகளில் நேரடி அதிகாரம் இல்லை.

2. பிரதேச சபையின் பங்கு

சபை வரம்புக்குள் உள்ள உள்ளூர் வீதிகள் (rural roads, by-roads) மீது பிரதேச சபைக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் RDA வீதியில் யாராவது பெயர் பலகை வைக்க வந்தால்,
பிரதேச சபை சட்டரீதியாக தடுக்க அதிகாரம் கிடையாது.
அவர்கள் செய்யக்கூடியது: “இது RDA-வின் கீழ் வரும் சாலை. RDA அனுமதி பெற்றீர்களா?” என்று கேட்பது.

தவறு இருந்தால், RDA-விற்கு தகவல் கொடுக்கலாம்.

3. சட்ட அடிப்படை

RDA Act No. 73 of 1981 – தேசிய சாலைகளின் பராமரிப்பு, கட்டுப்பாடு முழுவதும் RDA க்கு மட்டுமே.

Pradeshiya Sabha Act No. 15 of 1987 – உள்ளூர் சாலைகள் மட்டுமே சபை அதிகாரத்தில்.
முடிவு

RDA சொந்தமான சாலையில் பெயர்ப்பலகை வைக்க வருபவர்களை பிரதேச சபை தடுக்க முடியாது.
அவர்கள் செய்யக்கூடியது அனுமதி பெற்றீர்களா எனச் சரிபார்த்து, தவறு இருந்தால் RDA-வுக்கு தகவல் கொடுப்பது.

நாங்கள் பலகாலமாக  பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்த ஓரு சமூகமாக தமிழ் பேசும் மக்களாக தமிழர்களும் முஸ்லிம்களும் இருந்து, வந்திருக்கின்றோம் .
முரண்பாடை களைந்து நீதியின் பால் தீர்க்க வேண்டும்.
அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வீரமுனை பெயர்ப் பலகையை நாட்ட வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.