குருக்கள் மடம் பகுதிக்கு,நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் விஜயம்



 



மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் பகுதியில் மனிதப்புதைகுழி இருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று (04) காலை நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார ஆய்வுகளை மேற்கொண்டார். 


மேலும் புகார் அளித்த மக்களைச் சந்தித்த அமைச்சர், விசாரணை நியாயமாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.


காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.