நூருல் ஹுதா உமர்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் தலைப்பில் சிறப்பு சிறுவர் தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் இன்று பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், உரைகள், பாடல்கள் மற்றும் நாடகங்களின் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். சிறுவர் உரைகளில் அன்பு, நட்பு, ஒற்றுமை, கருணை போன்ற பண்புகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் கல்வி, விளையாட்டு மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கருத்து வெளியிட்ட அதிபர் தனது உரையில், சிறுவர்கள் நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்பதையும், அவர்கள் அன்பு மற்றும் மனிதநேயத்துடன் வளரும் போது மட்டுமே உலகை வழிநடத்த முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், பகுதி தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறுவர்களை வாழ்த்தி ஊக்குவித்தனர்.


Post a Comment
Post a Comment