பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்




 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் வாராந்தம் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது    முன்னெடுக்கப்பட்டது.

இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டதுடன், பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) இதன்போது விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

இச்சோதனையின் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் B அறிக்கை (B-Report) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போதைய காலப்பகுதியில் மின்சார விநியோகத்தில் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதால், குளிரூட்டிகளில் (Fridge/Freezer) வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை  கொள்வனவு செய்யும்போது  அதிக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என   பொதுமக்களுக்கான விசேட அறிவித்தலை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ளார்.

--