திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு



 


திருகோணமலையிலுள்ள சீன துறைமுக நகர், 5ஆம் கட்டை பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனம் தெரியா இருவர் இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபரே இச் சம்பவத்தில் உயிரழந்தவர் ஆவார்.


மேலதிக விசாரணைகளை சீன துறைமுக நகர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.