கிரான் பாலத்தை ஊடறுத்துப் பாய்கின்றது, வெள்ளம்



 


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


கன மழையால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளதுடன், பாதைகளிலும் நீர் தேங்க ஆரம்பித்துள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.