பிரதான ரயில் போக்குவரத்து மார்க்கத்தில் ரயில் தாமதங்கள் நிலவுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அலவ்வ மற்றும் ரம்புக்கனை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்த , ரயிலில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த பாதையிலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாமதம் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைச் சீர்செய்யும் வகையில், ரயில்வே திணைக்களம் திருத்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.


Post a Comment
Post a Comment