அக்கரைப்பற்றில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜண்ட்ரிக்கு விளக்கமறியல்



அக்கரைப்பற்றில் இலஞ்சம் பெற்ற  பொலிஸ் சார்ஜண்ட் இனை விளக்கமறியலில் வைத்து ஏப்ரல் 7  ந் திகதி கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கெளரவ நீதிபதி அபிநயா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில்  இலஞ்சம் பெற்ற  பொலிஸ் சார்ஜண்ட்ரிக்கு விளக்கமறியல்றில் விபத்து விசாரணைக்காக 4,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட், இன்று இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டார்.!


அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து தொடர்பாக ஒருவரிடம் 4 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவரை இன்று ,காலையில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னாள் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


குறித்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக குறித்த நபரிடம் இதை முடித்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கோரியதை அடுத்து குறித்த நபர் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்


இதையடுத்து அவர்களின் ஆலோசனையின்படி சம்பவ தினமான இன்று காலையில், அக்கரைப்பற்று ஆராத வைத்தியசாலைக்கு முன்னாள் இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற போக்குவரத்து பொலிஸ் சாஜன் இலஞ்சமாக பணத்தை வாங்கிக் கொண்டபோது அங்கிருந்து இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்


இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.