வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழான ஆற்றில்; இருந்து சடலமொன்று பொலிசாரால் இன்று(18) மீட்க்கப்பட்டது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்றில் வாழ்ந்து கோளாவில் 2 இல் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜா எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டார்.
குறித்த நபர் நேற்று முதல் காணவில்லை என குடும்பத்தார் தேடிவந்த நிலையில் இன்று காலை பாலத்தின் கீழான ஆற்றில்; சடலம் மிதப்பதாக நேரில் கண்டவர்கள் பொலிசாருக்கு தகவலை வழங்கினர்.
இதனை அறிந்து கொண்ட உறவினர்கள் சடலத்தை நேரில் கண்டு அடையாளம் காட்டினர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டதுடன் உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தடயவியல் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டு அவர்களது விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதேநேரம் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தவரின் மனைவி மரணடைமடைந்த நிலையில் அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்றில் வாழ்ந்து கோளாவில் 2 இல் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜா எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டார்.
குறித்த நபர் நேற்று முதல் காணவில்லை என குடும்பத்தார் தேடிவந்த நிலையில் இன்று காலை பாலத்தின் கீழான ஆற்றில்; சடலம் மிதப்பதாக நேரில் கண்டவர்கள் பொலிசாருக்கு தகவலை வழங்கினர்.
இதனை அறிந்து கொண்ட உறவினர்கள் சடலத்தை நேரில் கண்டு அடையாளம் காட்டினர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டதுடன் உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தடயவியல் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டு அவர்களது விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதேநேரம் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தவரின் மனைவி மரணடைமடைந்த நிலையில் அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment