இரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ- வின் படி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் பெசெஷ்கியன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பெசெஷ்கியனின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் இரான் மீது எந்தவிதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் இரானுக்கு வேண்டும்.
"நாங்கள் ஒருபோதும் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது போருக்குச் செல்லவோ முயன்றதில்லை," என்று கூறிய அவர், "சூழ்நிலையை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு, எங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துவதே ஆகும்" என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு மிரட்டல்
பெசெஷ்கியனின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் இரான் மீது எந்தவிதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்பதற்கான கட்டாய உத்தரவாதங்களை இரான் பெற வேண்டும்.
பட மூலாதாரம்,EPA/Shutterstock
படக்குறிப்பு,மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது (மாதிரி புகைப்படம்).
இதற்கிடையில், மத்திய கிழக்கில் இயங்கி வரும் 18 நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அவை குறிவைக்கப்படும் என்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.
புரட்சிகர காவல்படையின் கூற்றுப்படி, அவர்களது எச்சரிக்கை புதன்கிழமை தெஹ்ரான் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு அமலுக்கு வந்தது. இந்தத் தகவல் பல சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
இந்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு உதவுவதாகவும், இலக்குகளைக் கண்காணிக்க உதவுவதாகவும் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா மற்றும் என்விடியா போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர, சிஸ்கோ, இன்டெல், ஆரக்கிள், ஐபிஎம், ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
புரட்சிகர காவல்படை தனது அறிக்கையில், "ஊழியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக அலுவலகங்களை காலி செய்யுமாறு அறிவுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் அனைத்து நாடுகளிலும் உள்ள இந்த 'பயங்கரவாத அமைப்புகளுக்கு' அருகில் வசிக்கும் மக்கள், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு அப்பால் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது.


Post a Comment
Post a Comment