ஹோர்முஸ் நீரிணையை கடக்க மேலும் 5 கப்பல்களுக்கு அனுமதி



 


ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேலும் ஐந்து கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி, பிரான்சின் கொள்கலன் கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு சொந்தமான எரிவாயு கப்பல் ஒன்றும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, ஓமானுக்கு சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிய பிறகு பயணித்த முதலாவத கப்பல்களாக இந்த கப்பல்கள் கருதப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.