பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளவாலை பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை அர்ச்சுனாவும் மற்றொரு தரப்பினரும் உரிமை கோரி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (25) குறித்த காணியை சுத்தம் செய்வதற்காக அர்ச்சுனா சென்றபோது அங்கு வந்த இரு பெண்கள் அதனை தடுத்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தனது தற்காப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்த பெண்களை அச்சுறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களும் தன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக அர்ச்சுனா எம்.பி தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Post a Comment
Post a Comment