சர்வதேச பொலிஸ் அமைப்பு (INTERPOL) நடத்தும் முதலாவது பொதுத் தொடர்பு தொடர்பான உலக மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு பெற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், சட்டமாணி ஃபிரெட்ரிக் வுட்லர், பங்கேற்க 2026.04.26 அன்று காலை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார்.
அங்கு அவர், சமீப காலத்தில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி நிலைமைகளின் போது இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விசேட உரை ஒன்றை வழங்க உள்ளார்.
இவ்வாறு சர்வதேச பொலிஸ் மாநாட்டில் விசேட உரையை வழங்க அழைப்பு பெற்ற முதல் பொலிஸ் அதிகாரியாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி ஃபிரெட்ரிக் வுட்லர் ஆவார்.
இம் மாநாடு 2026 ஏப்ரல் 28 முதல் 30 வரை பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற உள்ளது.


Post a Comment
Post a Comment