சூரிய சக்தி மின்கலங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை



 


வெசாக் பண்டிகை காலத்தில் தேசிய மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி மின்கலங்களை இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.


தற்போதைய மின் நுகர்வு குறைவடைந்துள்ள நிலையிலும், வெசாக் காலத்தில் மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை பேணும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள கலங்களின் உரிமையாளர்கள் தற்காலிகமாக அவற்றை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.