மாவனெல்லை,ஹேலிஸ்வத்த பகுதியில் மா ஓயாவில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனும் மற்றொரு சிறுவனும் மா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தபோதே இவ்வாறு நீரில் மூழ்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிறுவனின் சடலம் அரநாயக்க வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment