சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் இராஜாங்கனை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை இன்று (09) காலை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி வீதமும் விநாடிக்கு 8,400 கன அடிக்கும் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2 கதவுகள் தலா 4 அடி வீதமும், ஏனைய 4 கதவுகள் தலா 8 அடி வீதமும் விநாடிக்கு 2,915 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கதவுகள் தலா 2 அடி வீதமும், ஏனைய 2 கதவுகள் தலா 3 அடி வீதமும் விநாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment