வெனிசுவேலா நிலநடுக்கம்



 


வெனிசுவேலாவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், 1900-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டில் பதிவான மிக வலுவான நிலநடுக்கம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டைத் தாக்கிய முதல் நிலநடுக்கம் 7.2 என்ற அளவாகப் பதிவானது. அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்துக்குள் 7.5 என்ற அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கப் பட்டியலின்படி, கடந்த 1900-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி வெனிசுவேலா கடற்கரைக்கு அருகில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட கராகஸ் மற்றும் பிற பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.