ஓட்டமாவடி முன்னாள் தவிசாளர் பைறூஸ் தாக்கல் செய்த வழக்கு டிஸம்பர் 9 ஆம் திகதி ஒத்திவைப்பு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று (11) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக இருந்த பைறூஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பைறூஸின் உறுப்புரிமையை நீக்கி இருந்தது.
இவ்விடயம் தொடர்பில் முன்னாள் தவிசாளர் பைறூஸ் இடைக்கால தடையுத்தரவு வேண்டி வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கு டிஸம்பர் மாதம் 9 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தவிசாளர் பைறூஸின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக கடந்த 31 ஆம் திகதி வர்த்தமானி பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment