#Breaking;ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு வீச்சு




 


ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பொது நிகழ்வு ஒன்றில் புகைக்குண்டு என்று கருதப்படும் ஒன்று வீசப்பட்டது. ஆனால், அவர் காயம் ஏதுமின்றி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.

வாகாயாமா என்ற இடத்தில் அவர் ஒரு நிகழ்வில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

ஒரு ஆள் பிரதமர் மீது ஏதோ ஒன்றை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கே புகை கிளம்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். ஒரு பெரிய சத்தம் கேட்டதாக மற்றொரு நேரில் கண்ட சாட்சி கூறினார்.

சந்தேகிக்கப்படும் நபர் என்று தோன்றும் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடிப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நபரை கைது செய்துவிட்டதாக கூறும் போலீஸ் மேற்கொண்டு எதையும் தெரிவிக்கவில்லை.

ஜப்பான் நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. வெளியிட்ட ஒரு காணொளியில் மக்கள் அந்த இடத்தை விட்டு கூட்டமாக ஓடுவது தெரிகிறது.