போஷனை கண்காட்சி





 நூருல் ஹுதா உமர்


தீவிர மந்த போசணை உடைய சிறுவர்களுக்கான போஷனை கண்காட்சியும், விழிப்புணர்வும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளிப்பும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். வாஜித் கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். ரிஸ்பின் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான போஷனை தொடர்பிலும், உணவு விழிப்புணர்வு சம்பந்தமாகவும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளித்தார்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை மாணவ மாணவிகள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.