முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள நாளை பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தனது ஊடகச் செயலாளருக்கு குறைந்த பெறுமதிக்கு வீடொன்றை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கிய உத்தரவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவே ஷிராந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லேசில் த சில்வா தெரிவித்தார்.
கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள குறித்த வீடு 5 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதன் சரியான பெறுமதி 55 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

