அக்கரைப்பற்று - ரூபவாஹினி றபீக் காலமானார்





அக்கரைப்பற்று பீச் வீதியினைப் பிறப்பிடமாவும், உடையார் வீதியினை வதிவிடமாகவும் கொண்ட ரூபவாஹினி   எழுத்தணிக்கலை (Graphics and Titles) உத்தியோகத்தர் ULM.றபீக் இன்று அதிகாலை அக்கரைப்பற்றில் காலமானார். தேசிய தொலைக்காட்சியில் இவர் 30 வருட காலத்துக்கு மேல் பணிபுரிந்தவராவார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியன் பழைய மாணவரான இவர், எல்லோருடனும் மிகவும் இனிமையாகப் பழகும் றபீக் கணிணிக் கலைகள் இலங்கையில் அறிமுகமாகும் முன்பே,  தொலைக்காட்சி எழுத்தணிக் கலையில் கோலோச்சியவர்.

இரண்டு பெண், ஒரு ஆண் பிள்ளைக்களுக்குத் தந்தையுமான இவரது ஐனாசா சற்று முன்  அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

எம்முடன் சக காலத்தில் பணிபுரிந்த அவருக்கு எமது அனுதாபங்கள்.


தொலைக்ககாட்சித் தொகுப்பாரளராய் பணிபுரிந்த நாட்களில்-
எனது பெயரையும் திரைக்குப் பின் ஓடவிட்டவர்.

ஐாவத்தைப் பள்ளிவாயலில் -
ஐமாஅத் தொழுகையை விட்டிராதவர்.

அறிவிப்பாளாகவேண்டும் என்ற-
தணியான தாகத்தக்கு தீனி போட்டவர்.

நகைச் சுவையாகப் பேசி
மண்ணின் பெருமையைப் பறைசாற்றியவர்.

தீராத நோயைக் கொடுத்து
இறைவன் இவரது தரஐாவை உயர்த்தினான் போல-
இவரையும் இறைவன் பொருந்தட்டும்!

பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!