இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சிநேயர் ஆலயத்திலும் மஹா சிவராத்திரி




(க.கிஷாந்தன்)

சிவராத்திரி விழாவை முன்னிட்டு மலையக பகுதியில் உள்ள சிவன் ஆலயங்களில் பல விசேட பூஜைகள் நடைபெற்றன.

அந்தவகையில் இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சிநேயர் ஆலயத்திலும், அட்டனில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்றது.

இந்த வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

அத்தோடு இந்த விசேட பூஜைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.