பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டபிள்யூ.குணதாஸ சற்று முன்னர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எச்.டபிள்யூ.குணதாஸ, தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு அந்த பதவியிலும் சேவையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய லெசில் சில்வா நேற்றைய தினம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதிவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய லெசில் சில்வா நேற்றைய தினம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதிவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

