பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்



மாலபே தனியார்மருத்துவ கல்லூரியை அகற்றுமாறு கோரி மருத்துவ மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது காவற்துறையினர் சற்று முன்னர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்காக குறித்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டம் மற்றும் காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.