புத்தளம் தப்போவயில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளத்தினால் நிர்க்கதி



புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் என்.எச்.எம் சித்ரானன்த தெரிவித்துள்ளார்.
குறித்த தரப்பினரை காப்பற்றுவதற்காக கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் ஏராளமான மக்கள் வௌ்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.