கோப் கமிட்டியில் மஹிந்தானந்த அளுத்கமகே



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கோப் கமிட்டியில் (COPE) நியமிக்கப்பட்டு, இரண்டு வராங்களாவதாக, குறித்த குழுவின் தலைவர் சுனில் கந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

26 பேர் கொண்ட கோப் கமிட்டியில் பிரசன்ன ரணதுங்கவுக்கு பதிலாகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சுனில் கந்துன்நெத்தி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி கடந்த மே மாதம்17ம் திகதியளவில் பிரசன்ன ரணதுங்கவின் பெயர் நீக்கப்பட்டு, மஹிந்தானந்த அளுத்கமகேவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.