தாம் பதவியில் இருக்கும் வரை எந்தவொரு சர்வதேச நீதிமன்றமோ அல்லது நீதிபதியோ அல்லது அமைப்போ நாட்டின் விடயங்களில் தலையீடு செய்ய இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
பாணந்துறை நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் 70 ஆவது ஆண்டுநிறைவு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

