மருதானை தங்கும் விடுதியொன்றில் இருந்து ஆணின் சடலம்



பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மருதானை பகுதியிலுள்ள தங்கும் விடுதியொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சம்பவத்தில் மரணித்தவர், பெண் ஒருவருடன் அந்த விடுதியில் தங்கியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

மேலும், இவர் பொரளை பகுதியைச் சேரந்த 52 வயதான நபராகும். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.