ஜனாதிபதி திடீர் விஜயம் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு



கிண்ணியா தள வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில் சென்று கேட்டறிந்தார்.
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.
வைத்தியசாலையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார்.
கிண்ணியா தள வைத்தியசாலையைத் தரமுயர்த்துமாறு கோரி கடந்த சில தினங்களாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வைத்தியசாலை நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக, ஜனாதிபதி உறுதியளித்ததாக கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அப்துல் அலீம் சமீன் தெரிவித்தார்.
இதற்கமைய, கிண்ணியா தள வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது