பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து



பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, கொழும்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.
கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை, மஹவ, யாழ்ப்பாணம், கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களுக்கு விசேட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் விசேட பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த பஸ் சேவைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.
1955 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக பயணிகள், போக்குவரத்து சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.