மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஜும்ஆ தொழுகைக்கு பின் ஆர்ப்பாட்டம்.
வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள வடக்காக அமைந்துள்ள மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ரஷ்ய விஜயத்தினிடையே கையொப்பமிட்டார்.

