ஹொரணையில் பல இலட்சம் ரூபாய் கொள்ளை



ஹொரணை - அமரனாகொல்ல பகுதியில் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 31 இலட்சம் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.