தற்காலிகமாக மூடப்பட்டது




நாத்தாண்டிய - தங்கொட்டுவ வீதியில் இருக்கின்ற தும்மோதரை பாலம் தாழிறங்கியுள்ளதால் அந்த வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது. 

நேற்று இரவு அந்த பாலத்தின் மேல் சென்ற லொறி ஒன்று சென்ற போது தாழிறக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பல ஆண்டுகள் பழமையான இந்தப் பாலம் கடந்த காலங்களில் பல தடவைகள் சேதமடைந்த போதிலும் அதற்கு நிரந்தர தீர்வொன்று வழங்காமையின் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.