சந்தித்ததும் சிந்தித்ததும்



(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண ஆளுநர்  ரோஹித போகொல்லாகமவிற்கும்  இலங்கை கடற்படையின் கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஏ.வீரசிங்ஹவிற்குமிடையில் சந்திப்பொன்று  இடம் பெற்றுள்ளது.
 
கிழக்கு மாகாண  ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) மாலை இச்சந்திப்பு இடம் பெற்றது.

கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக பதவியேற்றதையடுத்து முதல் முறையாக ஆளுநரை சந்தித்ததுடன் ஆளுநருக்கு ஞாபக சின்னமொன்றினையும் வழங்கி வைத்தார்.

இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபே குணவர்தன கலந்து கொண்டனர்.