வாத்துவை பிரதேசத்தில் களியாட்ட நிகழ்வில் இருவர் உயிரிழப்பு




வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் கெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது. 

வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.