காட்டு யானை தாக்கி,ஒருவர் பலி




கரடியனாறு, கொஸ்கொல்ல பகுதியில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மகுந்தன் ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்ட பின்னர் வீடு திரும்பும் போதே குறித்த நபரை யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ரூகம, பதுளை வீதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

கரடியனாறு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.