குற்றவாளி ஞானசாரரின், கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்



நீதிமன்றத்தை அவமதிக்க குற்றத்துக்காக,  6 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்ய கோரிய அனுமதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31), நிராகரித்துள்ளது.
அவர், தமது சட்டத்தரணி ஊடாக, இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், பிரிதீ பத்மன் சூரசேன மற்றும் சிரான் குணரத்ன, ஆகியோரே கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.