வாகன விபத்தில் பொலிஸ் கொன்ஸ்டபிள் மூவர் பலி



பதுளை  - கோட்டேகொட வைத்தியசாலைக்க அருகில் இடம்பெற்ற இ.போ.ச பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பதுளை நகருக்கு அருகில் மோட்டார் வாகனமொன்று மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், குறித்த மோட்டார் வாகன சாரதியும் அங்கு   கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் பலி