பார ஊர்தி பாதை மாறிய பயணம், பலியானனோர் இருவர்




கந்தானை - வெலிகம்பிட்டிய -ஜா- எல - பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர்  உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை 2.15 மணியளவில் கொள்கலன் பார ஊர்தி  வீதியை விட்டு விகியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. 
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி அதிக வேகத்தில் பயணித்தபோது வீதியின் அருகில் இருந்த  உணவகத்திற்குள் புகுந்த கொள்கலன், அருகில் இருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.