ரயில்களில், பெண்களுக்கென்று விசேட பெட்டிகளை ஒதுக்குவதற்குத் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது என, ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம், எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்திலிருந்து, இது நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக, ஆறு அலுவலக ரயில்களில், பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment