ரத்கம வர்த்தகர்கள் கொலைக்கு எதிராக




ரத்கம பிரதேசத்தில் காலி வீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் அவ்வீதியிலான போக்குவரத்துக்கு முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். 

ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. 

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். 

கடந்த ஜனவரி 23ம் திகதி குறித்த இரண்டு வர்த்தகர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், இருவரினதும் சடலங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியிருந்தார்.