போதையிலிருந்து, விடுதலை பெறும் நாட்டிக்காக


போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” வைபவம் இன்று இடம்பெற்றது. 

இன்று காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சகல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்குபற்றியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.