STF அதிகாரி தற்கொலை,அலரி மாளிகைக்கு முன்னால்


அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று (04) காலை 08.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

வரகாபொல, கந்தகம பிரதேசத்தைச் ​சேர்ந்த 30 வயதுடைய தில்ருக்‌ஷ சமரசிங்க என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.