விடுதலை


இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார். 

இந்நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி காலை 10.00 மணிக்கு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற உள்ளது. 

இதல் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது கூறத்தக்கது.